இவற்றில் சொர்ணவதி என்னும் ஆற்றைச்
சிலப்பதிகாரம் பொன்னி என்னும் தூய தமிழ்ப்பெயரால் குறிப்பிடுகிறது. 'பொன்படு
நெடுவரை'ப் பகுதியில் இது
தோன்றுவதால் இதற்குப் பொன்னி என்று பெயர். சங்ககாலப் புலவர்ஆவூர்
மூலங்கிழார்பாடல் (புறநானூறு 166) இதனைத்
தெளிவுபடுத்துகிறது.
கர்நாடக
மாநிலத்தில்ஸ்ரீரங்கப்பட்டணம்மற்றும்சிவசமுத்திரம்ஆகிய இரு தீவுகளையும் தமிழகத்தில்ஸ்ரீரங்கம்
(திருவரங்கம்)
தீவையும் காவிரி ஆறு கொண்டுள்ளது. இந்த மூன்றில்ஸ்ரீரங்கப்பட்டணம்தீவானது மிகப்பெரியது, இதுதிப்பு
சுல்தானின்தலைநகராக
விளங்கியது. இம்மூன்று தீவுகளிலும் அரங்கநாத சுவாமிக்கு கோயில்உள்ளது மற்றொரு சிறப்பு.
ஸ்ரீரங்கப்பட்டணத்தில் உள்ள அரங்கனை ஆதிரங்கன்என்றும் சிவசமுத்திரத்தில் உள்ள அரங்கனை
மத்தியரங்கன் என்றும்திருவரங்கத்தில் (ஸ்ரீரங்கம்)உள்ள
அரங்கனை அந்தரங்கன் என்றும் அழைப்பர்.
கர்நாடகத்தில்
காவிரியின் போக்கு
குடகு மாவட்டத்திலுள்ள பிரம்மகிரி
மலைப்பகுதியில்தலைக்காவிரிஎன்ற இடத்தில் காவிரி உற்பத்தியாகிறது. ஹாரங்கி ஆறானது குடகு
மாவட்டத்தில்காவிரியுடன் இணைந்து மாண்டியா
மாவட்டத்திலுள்ள கிருஷ்ணராஜ சாகர்நீர்த்தேக்கத்தை அடைகிறது.கிருஷ்ணராஜ சாகர் நீர்த்தேக்கம்மைசூருக்கு அருகில் உள்ளது. ஹேமாவதி, லட்சுமண தீர்த்தம் ஆகிய 2 ஆறுகளும்கிருஷ்ணராஜ சாகர் நீர்த்தேக்கத்தில்
காவிரியுடன் இணைகின்றன. கிருஷ்ணராஜசாகர் நீர்த்தேக்கத்திலிருந்து வெளிவரும் காவிரி ஸ்ரீரங்கப்பட்டணம்
தீவைஉண்டாக்குகிறது. பின்பு கபினி, சொர்ணவதி ஆகிய ஆறுகள் காவிரியுடன் இணைந்துகொள்கின்றன. பின் காவிரி சிவசமுத்திரம் தீவை உண்டாக்குகிறது. இங்கு
இருபிரிவுகளாக பிரியும் காவிரி ஒரு புறம்
ககனசுக்கி (Gaganachukki)அருவியாகவும் மறுபுறம் பாறசுக்கி
அருவியாகவும் விழுகிறது. வலப்புறம் அமைந்த ககனசுக்கி அருவியில் 1902 இல்ஆசியாவின்முதல்[சான்று தேவை]நீர் மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுகோலார் தங்க வயலுக்குமின்சாரம் வழங்கப்பட்டது. பின் காவிரியுடன் சிம்சா மற்றும் அர்க்கவதிஆறுகள் இணைகின்றன. அர்க்கவதி ஆறு
இணைந்தவுடன் காவிரியானது ஆழமான குறுகியபாறைகளின் வழியாக பாய்ந்து தமிழகத்தை அடைகிறது. ஆடு கூட இங்கு
காவிரியைத்தாண்டிவிடலாம் என்பதால் இவ்விடத்திற்குமேகேதாட்டு (Mekedatu)
என்று பெயர், இதைஆடுதாண்டும் காவிரி என்று அழைப்பர்.
தமிழகத்தில்
காவிரியின் போக்கு
மிக
குறுகிய அகலமுடைய ஆடு தாண்டும் காவிரியிலிருந்து தமிழகம் வரும் காவிரியானதுபிலிகுண்டுலுவழியாகஒகேனக்கல்
அருவியைஅடைகிறது.
பின் காவிரியானதுமேட்டூர்
அணையைஅடைந்து
ஸ்டான்லி நீர்த்தேக்கத்தை உருவாக்குகிறது. இங்கிருந்தே தமிழககாவிரி பாசனம் தொடங்குகிறது.
மேட்டூரிலிருந்து வெளிவரும் காவிரியுடன்பவானிஎன்னுமிடத்தில்பவானி
ஆறுகலக்கிறது.ஈரோடுநகரை கடந்து செல்லும் காவிரியுடன்கொடுமுடிஅருகேயுள்ள நொய்யல் என்னுமிடத்தில்நொய்யல்
ஆறுகலக்கிறது.
அமராவதி ஆறானதுகரூர்அருகேயுள்ள கட்டளை என்னுமிடத்தில் காவிரியுடன்
கலக்கிறது.கரூர்மற்றும்திருச்சிமாவட்டங்களில் பாயும் காவிரி அகண்டு
காணப்படுவதால் அங்கு பாயும் காவிரியை அகண்ட காவிரி என்பர்.முசிறி,
குளித்தலைநகரங்களை தாண்டிச்செல்லும் காவிரிமுக்கொம்புஎன்னும் இடத்தில்மேலணையைஅடைகிறது. இங்கு காவிரி இரண்டு கிளைகளாக
பிரிகிறது. ஒரு கிளைக்குகொள்ளிடம் என்றும் மற்றொன்றுக்கு காவிரி
என்றும் பெயர். வெள்ள காலத்தில்பெருகி
வரும் நீரானது கொள்ளிடத்தில் திருப்பி விடப்பட்டு காவிரி டெல்டாபகுதி பாதுகாக்கப்படுகிறது.கொள்ளிடம்காவிரியின் வெள்ள வடிகாலாக இருப்பதால்
பெரும்பாலும் வறண்டே காணப்படும். கொள்ளிடம் மற்றும் காவிரிக்கு நடுவில்
திருச்சிக்கு (திருச்சிராப்பள்ளி)
அருகேஸ்ரீரங்கம்
(திருவரங்கம்) தீவை
உருவாக்கிய பின் காவிரியானதுகல்லணையைஅடைகிறது. கல்லணையிலிருந்து செல்லும்
காவிரி பல சிறு கிளைகளாக பிரிந்துதமிழகத்தின்
நெற்களஞ்சியமான காவிரி டெல்டாவை உருவாக்கி வங்கக்கடலில்கலக்கிறது. காவிரி டெல்டாவில் அரசலாறு, வெண்ணாறு, வெட்டாறு, புதுஆறு, மன்னியாறு
ஆகிய பெயர்களால் காவிரியின் சில கிளைகள் அழைக்கப்படுகின்றன.தமிழகத்தின்தஞ்சாவூர்,
திருவாரூர்,
நாகப்பட்டிணம்மாவட்டங்கள், புதுச்சேரியின் காரைக்கால் பகுதி ஆகியவை
காவிரி டெல்டாவைசேர்ந்தவை.
பயன்பாடு
காவிரிநீரானது
பாசனத்திற்காகவும், மக்களின் அன்றாடத்தேவைகளுக்காகவும் நீர்மின்உற்பத்திக்காகவும்
முதன்மையாகப் பயன்படுத்தப்படுகிறது.
காவிரியின் குறுக்கே பல அணைகளும்
குடிநீர் நீரேற்று நிலையங்களும் தடுப்பணைகளும் நீர்மின்நிலையங்களும்
கட்டப்பட்டுள்ளன.
காவிரி ஆற்றின் சிவனசமுத்திர அருவியின்
இடது பக்கம் 1902-இல் அமைக்கப்பட்ட நீர்மின்நிலையமே ஆசியாவின் முதல்
நீர்மின்நிலையம் ஆகும்.
நீர்
பங்கீடு
காவிரிடெல்டாவில்
புதுச்சேரியின் காரைக்கால் பகுதி உள்ளதால் காவிரி கர்நாடகாமற்றும் தமிழ்நாடு
மாநிலங்களிலும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும்நேரடியாக பாய்கிறது.
நீர் பங்கீடு என்று வரும்போது கேரள மாநிலமும் உரிமைகோர காரணம்
காவிரியின் துணை ஆறாகிய கபினி கேரளாவில் உற்பத்தியாவதும், கபினிமற்றும் அதன் துணை ஆறுகளின் நீர் பிடிப்பு பகுதிகளும் அமராவதி
மற்றும்பவானியின் நீர் பிடிப்பு பகுதிகளும் கேரளாவில் இருப்பதே.
கர்நாடகாவில் காவிரியின் நீளம் = 320 கிமீ
தமிழ்நாட்டில் காவிரியின் நீளம் = 416 கிமீ
கர்நாடக தமிழக எல்லையில்
காவிரியின் நீளம் = 64 கிமீ